தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று அதாவது நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குறித்து விவாதம் நடத்தி, அதன்பின் மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன. ஆனால் விவாதங்கள் நடத்தப்படாமல் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின் குரல் வாக்கெடுப்பு எடுத்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் விவாதம் நடத்தப்படாமல் மசோதா நிறைவேறியதை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், ஏற்கனவே 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்த பின் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரையிலும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…