இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சுமார் ரூ.8,000 கோடி இழப்பு..! முதல்வர் சுக்விந்தர் சிங்

HimachalFloods

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சுமார் ரூ.8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வட இந்தியா முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

குறிப்பாக, இமாச்சலப் பிரதேசம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை மற்றும் வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

மேலும், மழையினால் ஏற்பட்ட சேதத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 8,000 கோடி ரூபாயை எட்டும் என்றும், மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க முயற்சிக்கிறோம் என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்