கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியது மணிப்பூர் மாநிலம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மணிப்பூர் தற்போது மாறியுள்ளது. ஏனென்றால் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர்களும் தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
unknown nodeஇதை அம்மாநில முதல்வர் பீரேன் சிங் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். மணிப்பூர் இப்போது கொரோனா இல்லாதது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், மருத்துவ பணியாளர்களின் செயலுக்கும், மக்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.