மணிப்பூரில் பெண் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த கலவரத்தில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, மாநில அரசு சூரசந்த்பூரில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது.
இதற்கிடையில், மணிப்பூரின் இம்பாலில் உள்ள சவோம்புங் பகுதியில் ஆயுதம் ஏந்திய சிலரால் பெண் ஒருவர் முகத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். பிறகு அடையாளம் காணமுடியாதபடி அவரது முகத்தை சிதைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,அவர்களிடம் இருந்து இரண்டு ஆயுதங்கள், ஐந்து தோட்டாக்கள் உட்பட ஒரு கரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
unknown node