பொருளாதாரத்தை சமாளிக்க பல நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்..!

Default Image

பொருளாதாரத்தை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று இந்திய வர்த்தக சபையின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன, ஆனால் அது தொற்றுநோய் காரணமாக தடம் புரண்டது. தொழில்துறையுடன் ஆலோசித்த பின்னர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கரிப் கல்யாண் யோஜனா, இலவச சமையல் எரிவாயு மற்றும் நேரடி நன்மை பரிமாற்ற திட்டங்கள் போன்ற சில நடவடிக்கைகளை அரசு அறிவித்தது என்று சீதாராமன் கூறினார்.

ஆத்மநிர்பர் பாரத் தொகுப்பின் கீழ் வெளியிடப்பட்ட மூன்று வெவ்வேறு அறிவிப்புகள் குறித்தும் நிதி அமைச்சர் பேசினார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். எந்தவொரு குறிப்பிட்ட துறைக்கும் நாங்கள் வாய்ப்புகளை கட்டுப்படுத்தவில்லை.

விவசாயத்துறையில் அரசாங்கம் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது, மேலும், நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதியை விலை உயர்ந்தது என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts