இந்தியாவில் ஒரே நாளில் மேலும் " 386 பேருக்கு கொரோனா" உறுதி .!

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை கொரோனாவால் 1,363,123 பேர் பாதிக்கப்பட்டும் ,
76,383 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 293,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் , இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய , மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் 4,421 பேர் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் தற்போது 4,789பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 353 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் , 124 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா , தமிழ்நாடு ,கேரளா டெல்லி போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.