MP GunFight : இரு குழுக்களிடையே துப்பாக்கி சூடு.! 4 பேர் உயிரிழப்பு..!

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் இரு குழுக்களிடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
டாடியா மாவட்டத்தின் ரெண்டா கிராமத்தில் இரு குழுவினருக்கு சொந்தமான பண்ணைகளுக்குள் ஆடு மற்றும் எருமைகள் நுழைவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. திடீரென வாக்குவாதம் முற்றியாதால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தியுள்ளனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அதில் ஒரு குழு மட்டும் வன்முறையில் ஈடுபட்டு உள்ளது. இந்த வன்முறையின் போது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இது குறித்து கூறிய காவல்துறையினர். “விசாரணைக்குப் பிறகுதான் சம்பவம் குறித்த விவரங்களைத் தெரிவிப்போம். இரு குழுக்களும் ஒன்றுக்கொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளனர்.