சத்தீஸ்கரில் கொரோனாவால் உயிரிழந்த நக்சலைட்டுக்கு, காவல்துறையினர் இறுதி சடங்கு செய்து வைத்துள்ளனர்.
சத்தீஸ்கரில் மாநிலம், சுக்மாவில் நக்சலைட் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு சுகாதார துறை அதிகாரிகளின் உதவியோடு காவல்துறையினர் இறுதிச்சடங்கு செய்துள்ளனர். இதுகுறித்து காவத்துறை அதிகாரி துருவ் கூறுகையில், கங்கா ஆயதா கோர்சா என்ற நக்சலைட் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, தெலுங்கானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் வியாழக்கிழமை அன்று உயிரிழந்தார். இதனையடுத்து, சுக்மா காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லாத நிலையில், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க வரவில்லை.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து கோர்ச்சாவிற்கு இறுதி சடங்கை நடத்த திட்டமிட்டனர். அதன்படி, சுகாதாரத் துறையின் உதவியோடு, காவல்துறையினர் கோர்சா உடலை இறுதி சடங்கு செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…