அமராவதியில் மக்களவை எம்பி நவ்நித் ரவி ராணா, லிவ்-இன் உறவுகளைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அமராவதியில் கஜானன் மகாராஜ் பிரகடன தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய எம்பி நவ்நீத் ராணா, ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்றால் என்ன? இதை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை, இன்றைய இளைஞர்களிடம் இருந்து தான் இதை பற்றி கேள்விப்பட்டு வருகிறேன், இது நமது கலாச்சாரம் இல்லை” என்று கூறியுள்ளார்.
unknown nodeபெற்றோர்கள் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களை மேற்படிப்பிற்காக அல்லது வேலைக்காக ஊருக்கு அனுப்புகிறார்கள. அதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடக்கிறது பெண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடக்கிறது இத்தகைய பாரம்பரியம் நமது கலாச்சாரத்தில் வந்துவிட்டது என்று ராணா மேலும் கூறினார்.
unknown nodeபெற்றோர்கள் நம்மை சுதந்திரமாக வளர்த்திருக்கிறார்கள். பணம் அதிகமாக இருப்பதால் தலைக்கு மேல் போவது நமது கலாச்சாரம் அல்ல. பெற்றோர்கள் தங்களின் கடமையை தவறாமல் செய்கிறார்கள், எனவே குழந்தைகளும் தங்களின் கடமையை செய்ய வேண்டும் என்று ராணா இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்