Categories: இந்தியா

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் NExT தகுதித்தேர்வு! சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

முதுநிலை நீட் தேர்வு மற்றும் இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வை ஒருங்கிணைத்து நெக்ஸ்ட் தேர்வு நடைபெறும்.

எம்பிபிஎஸ் முடித்த மாணவர்கள் மருத்துவராக பணியாற்றவும், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் பதிவு செய்து பணியாற்றவும் National Exit Test (NExT) என்ற தகுதித்தரவு அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு மற்றும் இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வை ஒருங்கிணைத்து இந்த நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த NExT தேர்வு, இளங்கலை மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் நவீன மருத்துவம் பயிற்சி செய்வதற்கு கட்டாய உரிமத் தேர்வாகவும் இருக்கும். மருத்துவப் பட்டதாரிகளுக்கான NExT தேர்வுக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும், ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியாவின் மருத்துவக் கல்விக் கட்டுப்பாட்டாளர் முன் வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) கடந்த ஆண்டு டிசம்பரில் NExT தொடர்பான வரைவு விதிமுறைகளை கருத்துக்களுக்காக பொது களத்தில் வைத்தது. இந்த விதிகளின் நோக்கம் மருத்துவ பட்டதாரிகளின் கல்வி மற்றும் பயிற்சிக்கான குறைந்தபட்ச பொதுவான தரங்களைக் குறிப்பிடுவதன் மூலம் நாடு முழுவதும் மதிப்பீட்டில் ஒரே சீரான தன்மையைக் கொண்டு வருவதாகும்.

நெக்ஸ்ட் தேர்வு இரண்டு பகுதிகளாக நடத்தப்பட உள்ளது. NExT 1, இது கோட்பாட்டு ரீதியாக இருக்கும், NExT 2, இது 7 மருத்துவ பாடங்கள் அல்லது துறைகளை உள்ளடக்கிய ஒரு நடைமுறை, மருத்துவ மற்றும் பரிசோதனையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…

53 minutes ago

நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…

2 hours ago

இங்கிலாந்தில் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.!

இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…

2 hours ago

“9 வருஷம் எப்படியோ தாக்கு புடிச்சிட்டேன்… இன்னும் 2 மாசம் தானே” – விஷால் கலகல பதில்.!

சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…

3 hours ago

”மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…

4 hours ago

ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…

4 hours ago