நாடு முழுவதும் 72 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!

இந்தியா முழுவதும் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.

இந்தியா முழுவதும் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.

என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை:

unknown node

நாடு முழுவதும் 72 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள், கள்ளநோட்டுகள் கடத்தல்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

குண்டர் கும்பல்:

unknown node

குஜராத்தின் காந்திதாமில் உள்ள குண்டர் கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளர் குல்விந்தரின் வளாகத்திலும் இந்த நிறுவனம் சோதனை நடத்தியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் செயல்படும் கும்பல் மீது என்ஐஏ இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. பஞ்சாபில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நான்காவது சுற்று சோதனை:

unknown node

குண்டர்கள் மற்றும் அவர்களின் கிரிமினல் சிண்டிகேட் மீது என்ஐஏ பதிவு செய்த வழக்கு விசாரணை தொடர்பாக நடந்து வரும் சோதனையில், கேங்க்ஸ்டர் நெட்வொர்க்கில் என்ஐஏ நடத்திய நான்காவது சுற்று சோதனை இதுவாகும். லாரன்ஸ் பிஷ்னாய் கடந்த ஆண்டு  நவம்பர் 24 அன்று பயங்கரவாதிகள், குண்டர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சிண்டிகேட் மூலம் பொதுமக்களிடையே பயங்கரத்தை உருவாக்க சதித் திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் NIA ஆல் கைது செய்யப்பட்டார்.

கொடூரமான குற்றங்கள்:

unknown node

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள கிரிமினல் சிண்டிகேட் உறுப்பினர்கள் நிதி திரட்டும் சதித்திட்டம், டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இளைஞர்களை பணியமர்த்துவது, முக்கிய நபர்களை குறிவைத்து கொலை செய்வது உள்ளிட்ட கொடூரமான குற்றங்களை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கு தொடர்பாக சோதனை நடைபெறுகிறது.