அதிகாலை 2.45வரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!5.30க்கு தூக்கு!நிறைவேறாமல் போன கடைசி ஆசை..அந்த நிமிடங்கள்

Published by
kavitha

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில்  குற்றவாளிகள் 4 பேருக்கும்  இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது

இத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தூக்கு மேடைக்கு செல்லும் சில நிமிடத்திற்கு முன்பு வரை கூட சட்ட போராட்டங்களை  குற்றவாளிகள் மேற்கொண்டனர்.  குற்றவாளிகளுள் ஒருவரான பவன் குப்தா சார்பில் இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று நள்ளிரவே மேல்முறையீடு செய்யப்பட்டது.

நாடே மார்ச்.,20 ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு என்ற எண்ணத்தில் இருந்த நிலையில் திடீரென குற்றவாளிகள் இரவில் தொடர்ந்த இம்மனு மீதான விசாரணை இன்று அதிகாலை 2.45 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஏபி சிங் “ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். ஆனால் வாதாடிய ஏபி சிங் இதற்கு முன் வைத்த அதே வாதங்களையே  உச்ச நீதிமன்றத்தில் வைத்தார்.மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் , பாட்டியாலா நீதிமன்றத்தில் வைத்த அதே வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளார். திரும்ப திரும்ப இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள் ,”ஏபி சிங் புதிய வாதங்களை வையுங்கள். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதீர்கள்” என்று ஆவேசமாக கூறினார்கள். இதையடுத்து வழக்கறிஞர் ஏபி சிங் பல வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறி, அதிகாலை நிறைவேற்றப்பட உள்ள இந்த தூக்கு தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என கூறினார்.ஏபி சிங்-கின் இந்த வாதத்தினை எதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவாளிகள் 4 பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும் வழக்கு மிகச்சரியாக நடந்து இருக்கிறது. முறையான பாதையில்  வழக்கு சென்று உள்ளது. கருணை மனு அளிக்க 4 வருடங்கள் வரை நேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு எதிரான தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.நீதிபதிகளின் இந்த தீர்ப்பினை கேட்டு அதிர்ச்சி அடைந்த குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங், குற்றவாளிகள் 4 பேரையும் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும். அவர்களின் கடைசி ஆசையாக இதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.வாதத்தினை உன்னிப்பாக கவனித்த நீதிபதிகள் இதை நீங்கள் மத்திய அரசு வழக்கறிஞரிடம் தானே கேட்க வேண்டும்.இது தொடர்பாக எங்களிடம் நீங்கள் கேட்க கூடாது என்று நீதிபதிகள் கூறிய நிலையில்  இது தொடர்பாக வாதத்தினை தொடர்ந்த  மத்திய அரசின் வழக்கறிஞர் “சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா” இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  குற்றவாளிகள் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்க முடியாது. காரணம் இது திகார் சிறை விதிகளுக்கு எதிரானது என்று கூறி கடைசி ஆசை என குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங்-கின் வாதம் எடுபடவில்லை.இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞரின் கூறிய கேட்டு  ஏபி சிங் அதிர்ச்சி அடைந்தார்.இந்நிலையில் எல்லா சட்டப்போராட்டங்களும் முடித்து வைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டது.20 நிமிடங்கள் தூக்கில் தொங்கியபடியே இருப்பார்கள் என்று சிறைத்துறை தகவல் தெரிவித்தது.

Published by
kavitha

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

5 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

7 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

8 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

8 hours ago