சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை – மாநில அரசு

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசத் மாநிலத்தில் நுழைவதற்கு இனி இ-பாஸ் தேவையில்லை என்று கடந்த 16 ஆம் தேதி மாநில அரசு முடிவு செய்தது. இதனையடுத்த, இமாச்சலப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை இ-பாஸ் இல்லாமல் மாநிலங்களுக்குச் செல்ல அனுமதித்துள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிம்லா, மணாலி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்லலாம்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் இ-பாஸ் இல்லாமல் கூட இமாச்சலப் பிரதேச அரசு இடைநிலை போக்குவரத்தை அனுமதித்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் இன்று மீண்டும் வர தொடங்கினர். குறிப்பாக இமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவிற்கு இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி அளித்ததால் சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025