கொரோனா தடுப்பூசி;கால அவகாசம் 2 மாதங்களாக குறைவா?..!

Published by
Edison

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.இதனால், கொரோனா பரவல் சற்று குறைந்து இருந்தது.

கொரோனா மீண்டும் அதிகரிப்பு:

ஆனால்,தற்போது தென் கொரியா,சீனா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியாவில் மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.

கால அவகாசம் குறைவு?:

இந்நிலையில்,கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் 3 மாதங்களிலிருந்து 2 மாதங்களாக குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வல்லுநர் குழு பரிந்துரை:

முன்னதாக,கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திய பிறகு,இரண்டாவது தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் 12 – 16 வாரங்களாக உள்ள நிலையில்,அதனை 8 -12 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு, வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும்,ஒமைக்ரானை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முக்கிய பங்கு வகிப்பதால் அதனையும் விரிவுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

1 hour ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

2 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

3 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

3 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

3 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

4 hours ago