உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.இதனால், கொரோனா பரவல் சற்று குறைந்து இருந்தது.
கொரோனா மீண்டும் அதிகரிப்பு:
ஆனால்,தற்போது தென் கொரியா,சீனா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியாவில் மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.
கால அவகாசம் குறைவு?:
இந்நிலையில்,கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் 3 மாதங்களிலிருந்து 2 மாதங்களாக குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வல்லுநர் குழு பரிந்துரை:
முன்னதாக,கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திய பிறகு,இரண்டாவது தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் 12 – 16 வாரங்களாக உள்ள நிலையில்,அதனை 8 -12 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு, வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும்,ஒமைக்ரானை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முக்கிய பங்கு வகிப்பதால் அதனையும் விரிவுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…