ஒடிசா கோர விபத்து… உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்வு.!

Odisha Train 238

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்வு என  ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் நேற்று மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 233 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போதுவரை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்த 650க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மேற்பார்வையிட்டு மீட்புப்பணிகளை மேலும் துரிதப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்