விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.
இதனையடுத்து, அவர் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்குவதாக அறிவித்தார். அதன்படி, அதனை உருவாக்கி, அதற்கென பிரதேய்க பாஸ்போர்டையும் உருவாக்கினார். தற்பொழுது கைலாசா எங்கே இருக்கிறது என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, தினமும் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா.
இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 300 பக்க பொருளாதர கொள்கையும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து பேக்ங் ஆப் கைலாசா துவங்கப்படவுள்ளதாகவும், வரும் விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டு விட்டதாகவும், உள்நாட்டிற்கு ஒரு கரன்சி, வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சி அச்சடிக்கப்பட்டு, தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டிற்கு நிறைய நன்கொடை கிடைத்திருப்பதால், நல்ல காரியத்திற்காக செலவிட வங்கி தொடங்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்படியே கைலாசாவின் ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டிருப்பதாகவும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது எனவும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…