விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.
இதனையடுத்து, அவர் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்குவதாக அறிவித்தார். அதன்படி, அதனை உருவாக்கி, அதற்கென பிரதேய்க பாஸ்போர்டையும் உருவாக்கினார். தற்பொழுது கைலாசா எங்கே இருக்கிறது என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, தினமும் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா.
இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 300 பக்க பொருளாதர கொள்கையும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து பேக்ங் ஆப் கைலாசா துவங்கப்படவுள்ளதாகவும், வரும் விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டு விட்டதாகவும், உள்நாட்டிற்கு ஒரு கரன்சி, வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சி அச்சடிக்கப்பட்டு, தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டிற்கு நிறைய நன்கொடை கிடைத்திருப்பதால், நல்ல காரியத்திற்காக செலவிட வங்கி தொடங்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்படியே கைலாசாவின் ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டிருப்பதாகவும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது எனவும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…