உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில் தனது நிலை என்ன என்பதை தெரிவித்துள்ளது மத்திய அரசு. மரண தண்டனையை தூக்கிலிடுதல் முறையில் மட்டுமே நிறைவேற்ற முடியும்.மாறாக விஷ ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என அந்த வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் தகவல்கள் வெளியானது தொடர்பான விவகாரத்துக்கு, தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தைதான் கைதுசெய்ய வேண்டும்’ என்று எட்வர்ட் ஸ்நோடென் தெரிவித்துள்ளார்… இந்த விவகாரம்குறித்த எட்வர்டு ஸ்நோடெனின் ட்விட்டர் பதிவில், ‘ஆதார் மீறல்களை செய்தியாளர் வெளிக்கொண்டுவந்ததற்கு அவருக்கு விருது அளிக்க வேண்டும். விசாரணை நடத்தக் கூடாது. இந்த அரசாங்கம், உண்மையில் நீதிகுறித்து அக்கறை கொண்டிருந்தால், அவர்களுடைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களுடைய கொள்கைகள் 100 கோடி இந்தியர்களின் தனியுரிமையை அழித்துவிடும். இதற்குக் காரணமானவர்களை அரசு கைதுசெய்ய வேண்டுமா? […]
நாடு முழுவதும் திரையரங்குகளில், படம் தொடங்குவதற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டுமென்றும், அப்போது திரையில் தேசியக்கொடி தோன்ற வேண்டும் என்றும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இயலாதவர்கள் எழுந்து நிற்க முடியுமா என்று கேட்கப்பட்டதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, குழு ஒன்றை உடனடியாக அமைத்து, விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து, விதிகளை உருவாக்க வேண்டும் என்பதால், குறைந்தபட்சம் 6 மாத […]
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்கு சற்று முன்பு லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் லக் ஷ்மண் மகாதோ மற்றும் மதன் யாதவ் என்ற இருவர் மீது லக் ஷ்மண் யாதவின் பக்கத்து வீட்டுக்காரரான சுமீத் யாதவ் என்பவர் தன்னை தாக்கியதாகவும் 10 ஆயிரம் ரூபாய் திருடியதாகவும் புகார் கொடுத்தார். […]
ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் நகரை அடுத்த லர்னூ என்ற கிராமம் வழியாக ஊடுருவ முயன்ற சில தீவிரவாதிகளை ராணுவத்தினர் தடுத்து நிறுத்த முயன்ற போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மேலும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும், ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. source: www.dinasuvadu.com
அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் இந்திய மென்பொறியாளர்கள் நிலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எச்.1.பி விசாக் காலத்தை நீட்டிக்க பிடி இறுகி இருப்பதால், அங்கு பணிபுரியும் இந்திய மென்பொறியாளர்கள் தரம் பிரிக்கப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அவர்கள் இந்தியா திரும்பினால், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக இங்கு அதே நிறுவனத்தில் பணிபுரிவோர் பலரை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய தொடங்கி உள்ளன. இதுமட்டும் அல்லாமல் கிரீன் கார்டு எனப்படும் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ள […]
இந்தியாவில் 500, 10௦0 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. ஆனால் ஆர்.பி.ஐ மற்றும் நேபாளத்தின் தேசிய வங்கியான நேபாளம் ராஷ்டிரா வங்கியும் இணைந்து இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கின்றனர். இதனால் அங்கு இன்னும் இந்த 500, 1000 நோட்டுக்கள் தடை செய்யப்படாமல் இருக்கின்றன. அங்கு இந்த நோட்டுக்கள் இன்னும் கேசினோக்களில் பயன்படுத்தபடுகின்றன. இந்த கேசினோக்களில் ரூ.500 கொடுத்தால் அங்குள்ள மதிப்ப்புக்கு 50% கழித்துக்கொண்டு ரூ.400 கொடுகின்றனர். […]
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடுபனி நிலவுகிறது. இதனால் மக்கள் மட்டுமன்றி நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பனியிலிருந்து ஆடுகளைக் காப்பாற்ற அவற்றுக்கு ஆடை அணிவித்துள்ளனர். டெல்லியில் குறைந்த பட்சமாக 7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவுகிறாது அடர்த்தியான பனியால் பாதை தெரியாததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றன. 45 ரயில்கள் தாமதமான நிலையில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விமானங்களும் தாமதமாகி வருகின்றன. source: www.dinasuvadu.com
மரபணு சோதனையில் ஹர் கோவிந்த் குரானாவின் பணியை பாராட்டி 13 நாடுகளில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. ராய்பூரில் சிறிய கிராமம் ஒன்றில் ஜனவரி 9-ம் தேதி 1922 ஆம் ஆண்டு பிறந்த ஹர் கோவிந்த் குரானா. குரானாவின் குடும்பம் அவர்களது கிரமத்தில் படித்த குடும்பமாக அறியப்பட்டது. குரானாவின் தந்தை அவரது ஐந்து குழந்தைகளுக்கும் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து கல்வி உதவி தொகை மூலம் இளநிலை பட்டப்படிப்பை 1943ஆம் ஆண்டும், முதுகலை பட்டப்படிப்பை 1945 […]
தமிழகத்தைச் சேர்ந்த ‘ஆஸ்கார் நாயகன்’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வடகிழக்கும் மாநிலமான சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேங்டாக்கில் நடைபெற்ற ரெட் பாண்டா விண்டர் கார்னிவலின் துவக்கவிழாவில் பேசிய சிக்கிம் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சிக்கிம்மிற்கு சுற்றுலா கீதம் உருவாக்கப்போகும் ரஹ்மான், விழாவிற்கு பாரம்பரிமான உடை அணிந்து வந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மான், சிக்கிம்மின் […]
ஆண்டுதோறும் பிசிசிஐ அலுவலகம், வருமான வரிக் கணக்குகளை, வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகிறது. தற்போது பிசிசிஐ-யை தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ராகுல் ஜோரி நிர்வகித்து வருகிறார். மேலும் அவருக்கு உறுதுணையாக சந்தோஷ் ரங்கநேக்கர் (தலைமை நிதி அதிகாரி) உள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இருவரும் தங்களது பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பிசிசிஐ, தனது வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பித்திருந்தது. இதில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பாக வருமான […]
துர்க்கையின் சிறப்பை அறியாமல் நாம் யாரும் இல்லை ….அந்த துர்கையின் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும் … வீட்டிலும் சரி, கோயிலிலும் சரி… விளக்கேற்றுவதும் விளக்கேற்றி வழிபடுவதும் ரொம்பவே விசேஷம்! கோயிலுக்குச் செல்லும் போது, அவசியம் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, வழிபாடு செய்யுங்கள். அந்த வழிபாட்டின் போது, மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒளிமயமான வாழ்க்கை நிச்சயம் கிடைக்கப் பெறுவீர்கள்! கோயிலுக்கு எப்போதெல்லாம் தரிசனம் செய்யச் செல்கிறோமோ, அப்போது ஆலயத்தில் விளக்கேற்றச் சொல்லி அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள். மாதந்தோறும் கோயில்களுக்கு […]
உலக வர்த்தக கழக விதிகளுக்கு மாறாக சூரிய மின்னுற்பத்திக் கருவிகளை விநியோகிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்தியா பாரபட்சம் காட்டியதாக அமெரிக்கா புகார் செய்தது. சூரிய மின்னுற்பத்தியில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டுக் கருவிகளையே பயன்படுத்துமாறு செய்ததன் மூலம், உலக வர்த்தக கழக விதிகளை இந்தியா மீறிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. சூரிய மின்னுற்பத்தி கருவிகள் இறக்குமதியில் விதிகளுக்கு மாறாக பாரபட்சம் காட்டிய இந்தியா மீது வர்த்தக தடைகளை விதிக்க வேண்டும் என உலக வர்த்தக கழகத்தில் அமெரிக்கா கடந்த […]
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, ஹாங்காங் புறப்பட தயாராக இருந்த அந்த விமானத்தில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விமான பணிப்பெண்களின் உடைமைகளும் சோதனையிடப்பட்டன. அவர்களில் ஒருவரின் பெட்டியில், இந்திய மதிப்பில் 3 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது ஹவாலா பணம் என்றும், ஹாங்காங் கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். சம்பந்தப்பட்ட விமானப் பணிப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள், […]
மும்பையில் அபிலாஷா நகரில் ரே ரோடு பகுதியில் இயங்கும் பட்டறை ஒன்றில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. தகவலின்பேரில் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், போராடி நெருப்பை கட்டுக்குள் வந்தனர். மின்கசிவின் காரணமாக தீப்பற்றியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் நேரிடவில்லை. கடந்த 29-ம் தேதி, மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் தீப்பிடித்து, 14 பேர் பலியான சோகத்தின் வடு மறையும் முன் மற்றொரு தீ விபத்து நேரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. source: www.dinasuvadu.com
இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தேசப்பற்றை ஊட்டும்வகையில், திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு ஏற்கனவே வெளியாகி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது குறித்து சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அவற்றை களையவும், புதிய வழிகாட்டும் விதிகளை உருவாக்கவும் அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 6 மாதங்களில் இந்தக் குழு […]
கேரளாவில் காவலர்கள் அனைவருக்கும் 16Gb மெமரி கொண்ட கேமரா வழங்கப்பட்டது.. பணியின் போது காவலர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர்,,பொதுமக்கள் காவலர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை கண்டறிய இந்த சேவையை கேரள அரசு செய்து உள்ளது.. இதனை போலீஸ் கண்ட்ரோல் ரூம் கண்காணிக்கும் எனவும் இதனால் பல அசம்பாவிதங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது எனவும் அந்த மாநில அரசு கருதுகின்றனர். இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் இம்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கால்நடைத் தீவன ஊழலின் 2-வது வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்துக்கு நேற்றுமுன்தினம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கங்கோத்ரி தேவி பாட்னாவில் நேற்று காலமானார். இதுகுறித்து லாலுவின் மகன் தேஜஸ்வி கூறியதாவது: கங்கோத்ரி தேவியின் மரணம் குறித்து எனது தந்தை லாலுவுக்கு சிறை அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவித்துள்ளேன். அத்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோல் கோர முடிவு […]
2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் ரூ.700 கோடி செலவில் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இலவச வை-ஃபை வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பாட்னா, விசாகப்பட்டினம், ராஞ்சி, டெல்லி, சென்னை உட்பட 215 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பினை அடுத்து, நடப்பாண்டு இறுதிக்குள் […]
வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் தங்குவதற்கு போதுமான இடவசதி இன்றி உத்தரபிரதேசத்தில் மட்டும் கடும் குளிருக்கு 70 பேர் பலியாகி உள்ளனர்.ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் 2.1 டிகிரி செல்சியஸ் வரையிலும் தரைப்பகுதிகளில் 5 டிகிரி வரையிலும் குளிர் நிலவுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அடர்ந்த பனி காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் […]