ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் ராணுவ தின விழாவின்போது, வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்துவது வழக்கம். இந்த ஆண்டு ராணுவ தினத்துக்காக டெல்லியில் உள்ள கன்டோன்மென்ட் மைதானத்தில், நேற்று வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்திருந்தனர். ஹெலிகாப்டரில் கயிற்றில் தொங்கியவாறே சாகசம் செய்ய 3 வீரர்கள் பயிற்சி எடுத்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விழுந்ததால், அவர்கள் மூவரும் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் காயமுற்ற 3 பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் […]
கடந்த 2000 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டை மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக பிலால் அகமது காவா என்ற தீவிரவாதி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தான். இவன் லஷ்கர் இ தய்பா இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிலால் அகமது காவா-வை டெல்லி விமான நிலையத்தில், டெல்லி சிறப்பு காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று கைது […]
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி பார் கவுன்சிலில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்களாக இருப்பதால் அவர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் முறையிட்டார். இதை வல்லுநர் குழு பரிசீலித்ததை அடுத்துச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பிக் கருத்துக் கேட்க இந்திய பார் […]
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பேரிட மேலாண்மை குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி ரசல் ஜோய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,கேரளா, தமிழகம், மத்திய அரசு சார்ந்த உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற வேண்டும் எனவும் அதேபோல் 2 மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து பேரிடர் மேலாண்மை திட்டத்தில் செயல்பட வேண்டும். முல்லை பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை ஆய்வு செய்ய […]
இந்தியாவை பொறுத்தவரை வாகன விற்பனையில் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் இடையே விற்பனையின் அளவு அதிகாமாக தான் விற்பனையாகும் ஆனால் இதற்கு மாறாக கடந்த டிசம்பரில் 2,39,712 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய 2016 டிசம்பரில் 2,27,823 வாகனங்கள் விற்பனையான நிலையில், 5.22 சதவீத அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. கார்களின் விற்பனையை பொறுத்தவரை 2016ம் ஆண்டு டிசம்பரை ஒப்பிட்டால் கடந்த டிசம்பரில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 2016 டிசம்பரில் 1,58,617 கார்கள் விற்பனையான நிலையில் கடந்த டிசம்பரில் […]
3 நாள்கள் நடைபெறும் மகோத்சவம் விழா கோரக்பூரில் நாளை தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் மைதானத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோரக்பூர் மகோத்சவத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகி 3 வாரங்கள் கழித்து, இன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் கர்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் மின் திட்ட ஊழல் வழக்கில் கேரள நீதிமன்றத்தால் விடுவித்த நிலையில் தற்போது சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மின் திட்ட ஊழல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வழக்கில் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.கேரளாவில் பழமையான நீர்மின் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டத்தில் ஊழல் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டிவருகிறது. பினராயி விஜயனை கேரள உயர்நீதிமன்றம் வழக்கில் […]
மத்திய அரசு பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.இந்நிலையில் நேற்று மத்திய அரசுக்கு நாப்கின்னில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மீதான GST-வரியை நீக்க கோரி மத்திய அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளனர் பெண்கள்…
ஜார்கண்ட் – சத்தீஸ்கரில் எல்லைக்கு அருகே 6 வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவத்தில் தொடர்புடைய நக்சலைட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட்-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே பால்கம்பூரில் உள்ள பாக்சைட் சுரங்கத்தில் ரயில் பாதை கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்ட 6 வாகனங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக நக்லைட்டு ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மீது […]
இன்று பாஜக தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்தர மோடி ஆலோசனை நடத்துகிறார் . கடந்த ஆண்டு நடந்த பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் இன்று வெற்றி பெற்று ஆட்சியைபிடித்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட அமைப்பு ரீதியான தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் மற்றும் இந்தாண்டு நடக்க உள்ள திரிபுரா, மேகலயா, கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல்களில் […]
தொடர்ந்து வார்த்தை போரில் ஈடுபடும் பாஜக-கர்நாடக காங்கிரஸ் மீண்டும் கருத்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்த உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்காத கர்நாடக அரசு இந்துக்களுக்கு எதிரானது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்துத்வா அமைப்புகளை சித்தராமையா கடுமையாக விமர்சித்தார். இதனிடையே சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, கடந்த மூன்று ஆண்டுகளில் கர்நாடகாவில் 20க்கும் மேற்பட்ட பாஜக […]
“இந்து என்பது மதம் அல்ல; வாழ்வியல் நெறி” எனஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தபின் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுவரையில் இந்தியாவில் துணை குடியரசு தலைவர்கள் யாரும் இப்படி ஒரு தனிப்பட்ட மதத்தினை பற்றி பேசியதே கிடையாது.இப்போதுதான் முதல் முறையாக வெங்கையா நாயுடு பேசியுள்ளார். மதச்சார்பற்ற இந்தியாவை இது கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.
2017 ஆம் ஆண்டில் , எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.இந்தியத் தரப்பில் 28 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர் 2017 ஆம் ஆண்டில் , எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் 860 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக […]
பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவ கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது. ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9 மணி 28 நிமிடங்களில் ராக்கெட் ஏவப்பட உள்ள நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது.. இந்தியாவின் 100வது செயற்கைக் கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்குகிறது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக் கோள்கள் […]
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ராயசோட்டி புறநகர் பகுதியில், செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக ஆந்திர எஸ்.பி. பாபுஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உப்பரபள்ளி பகுதியில் உள்ள கிருஷ்ணாரெட்டி ஏரி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செம்மரங்களை வெட்டி கடத்த தயார் நிலையில் வைத்திருந்த கும்பலை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் கற்கள் மற்றும் கோடாரிகளை போலீசார் மீது தாக்குதல் வீசிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த 28 பேரை ஆந்திரப் போலீஸார் […]
யுபிஎஸ்சி தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று காணலாம்.
பேபால் நிறுவனம் வீட்டில் இருந்து பகுதிநேரப் பணியாற்றும் ஐந்நூறு பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. வலைத்தளம், செல்பேசி செயலி, வலைத்தள வடிவமைப்பு, இணைய ஆராய்ச்சி, தகவல் பதிவு, கணக்குப் பதிவு, கணிப்பொறி வரைகலை ஆகிய துறைகளில் பெரும்பாலானோர் பணியாற்றுவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இவர்களில் 41விழுக்காட்டினர் கடந்த ஓராண்டில் மிக விரைவான வளர்ச்சியடைந்துள்ளதும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து அதிகப் பணி கிடைப்பதும் தெரியவந்துள்ளது. குறித்த நேரத்தில் பாதுகாப்பான முறையில் ஊதியம் கிடைப்பதே இந்தத் […]
கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 650 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.44 புள்ளிகள் உயர்ந்து 34,565.63 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், எண்ணெய் & எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.50 புள்ளிகள் அதிகரித்து 10,655.50 புள்ளிகளாக உள்ளது. ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், சன் […]
பாட்னா-மொகாமா பயணிகள் ரயில் நேற்று இரவு மொகாமா ரயில்நிலைத்திற்கு வந்தது. அதன்பின்னர், அங்கு பயணிகளை இறக்கி விட்டு யார்டுக்கு சுத்தம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இந்த ரயிலின் பெட்டிகளில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடிய போதும், எஞ்சினுடன் நான்கு பெட்டிகளும் தீயில் கருகி முழுமையாக சேதமடைந்துவிட்டன. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு ரயில் தடம் புரண்டதில் விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பயணிகள் யாரும் இல்லாதால் […]