டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 – 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் உரையாற்றினார். பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன் […]
டெல்லி : 2025 – 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம், ஒழுங்குமுறை ஆகிய 6 முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். இந்த பட்ஜெட்டில் மிக முக்கிய எதிர்பார்ப்பாக இருந்த வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்ட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரையில் உள்ளவர்களுக்கு வருமான […]
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய அம்சங்களை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் கூறினார். அதில், பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, இளைஞர்கள் நலன், உணவு உத்தரவாதம், வேளாண் வளர்ச்சி ஆகியவற்றிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் கூட்டணியாக புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய […]
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 – 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். தெலுங்கு எழுத்தாளர் குருஜாடா […]
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை அடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இன்று காலை 11 மணிக்கு ‘மத்திய பட்ஜெட் 2025 -2026’-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்-ஐ தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை […]
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போது 3வது முறையாக நிலையான ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மியும், எதிர்கட்சியாக உள்ள பாஜக, மீண்டும் டெல்லியில் தனது இருப்பை காட்ட முயற்சிக்கும் முனைப்பில் காங்கிரஸ் என மும்முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இப்படியாக தேர்தல் களம் பரபரக்க, […]
டெல்லி : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் வளர்ச்சி குறித்து சில விஷயங்களை பேசினார். குறிப்பாக, இந்தியாவின் IT மற்றும் Digital India திட்டங்கள் உலகளவில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன எனவும்,உலகின் வளர்ந்த நாடுகளை இந்தியாவின் UPI பரிவர்த்தனை ஈர்த்துள்ளது எனவும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் ” மத்திய அரசு, Make in India மற்றும் (Atmanirbhar […]
டெல்லி : 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தின்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நின்று பிரதமர் மோடி சில விஷயங்களை பேசியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பது பற்றி பார்ப்போம். அதில் பேசிய பிரதமர் மோடி ” […]
டெல்லி : இந்தியாவின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாக இருக்கும் ஆறு யமுனை.எனினும், இது மிகவும் மாசுபட்ட ஆற்றாக மாறிவிட்டது, குறிப்பாக டெல்லி, அக்ரா போன்ற நகரங்களில் ஆற்றில் கழிவுகள் கலந்து வருகின்றன என்கிற செய்தியும் அடிதடி வெளியாகி வருகிறது. தொழில்துறை கழிவுகள், வீட்டு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை ஆற்றின் தரத்தை மோசமாக்கி விட்டன. ஆறுக்கு சென்று அதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலம் பல பகுதிகளில், நீர் கறுப்பாக மாறி, […]
டெல்லி : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். அந்த பட்ஜெட் மசோதாவையும் சேர்த்து மொத்தம் 16 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் மிக முக்கிய மசோதா, வக்பு சட்ட திருத்தம் ஆகும். ஏற்கனவே உள்ள […]
டெல்லி : நாளை (ஜனவரி 31) டெல்லி நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. நாளை முதல் பிப்ரவரி 13 வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது . அதன் பிறகு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெறஉள்ளது . இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைவரும் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் 2025 மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். […]
அலகாபாத் : உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்கள் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஸ்வரூப் ராணி நெஹ்ரு மருத்துவமனை, மோதி லால் நேரு மருத்துவமனை, பிரயாக்ராஜ் மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, கும்பமேளா கூட்ட நெரிசல் […]
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் என மூன்றும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளிக்க நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று அதிகாலை இந்த கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு, அதிகளவில் விஐபிக்கள் வருவதால் அவர்களுக்கு […]
அலகாபாத் : உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் இரங்கலை தெரிவித்தும் மற்றோரு பக்கம் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த சம்பவம் குறித்து பேசுகையில் ” மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த […]
டெல்லி : டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என இந்த தேர்தல் மும்முனை போட்டியாக உள்ளது. தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் வாக்குறுதிகளை கூறுவதோடு மற்ற கட்சியினர் மீதான தங்கள் விமர்சனங்ளையும் முன்வைக்க தவறவில்லை. டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் […]
சென்னை : இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர், பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அரிசியால் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு மத்திய, […]
பாக்பத் : உத்தரபிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்மிக திருவிழாவில் ‘லட்டு பிரசாதம்’ வாங்க சென்ற பக்தர்கள் மீது ,மரத்திலான மேடை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பாக்பத் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறுகையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 20 பேர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினார், மீதமுள்ளவர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தை […]
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை நாளை, ஜனவரி 29, 2025 அன்று காலை 6:23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட் NVS-02 எனப்படும் இரண்டாம் தலைமுறை நவிகேஷன் செயற்கைக்கோளை (NavIC) சுமந்து செல்கிறது. கவுண்டவுன் தொடக்கம் நாளை GSLV F15 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான […]
டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு நேர ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கவுள்ளதால், தற்போதைய பணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சைலேஷ் குமார் தவே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீதர் வேம்பு, “நிறுவனத்தின் ‘தலைமை விஞ்ஞானி’ என்ற முறையில் தான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் […]