டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். திருமணம், தத்தெடுப்பு, விவாகரத்து, சொத்துரிமை என ஒவ்வோரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனை முறைப்படுத்தி ஒரே மாதிரியான முறைகளை பின்பற்றும் நோக்கில் வகைப்படுத்தப்படுகிறது பொது சிவில் சட்டம். முதல் மாநிலம் உத்தரகாண்ட் : இச்சட்டத்திற்கு பாஜக தரப்பு ஆதரவு தெரிவித்தாலும் , இது மத ரீதியிலான உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என […]
மும்பை: நடிகர் சயீப் அலிகான் கத்திக்குத்து வழக்கில் சிசிடிவியில் பதிவான நபரை ஒத்த அடையாளத்துடன் இருந்ததால் கைது செய்யப்பட்டு, பின்னர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்ட ஆகாஷ் கனோஜியா வேதனை தெரிவித்துள்ளார். மர்ம நபரால் கத்தி குத்து சம்பவத்துக்கு ஆளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு […]
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100வது ஏவலுக்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் நாளை மறுநாள் (29ம் தேதி) விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதாவது, என்விஎஸ்-02 என்ற செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின், 2வது ஏவுதளத்திலிருந்து, நாளை மறுநாள் காலை 6.30 மணியளவில் NVS-2 என்ற […]
உத்தரகாண்ட் : பாஜக ஆளாத மாநிலங்களில் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, அந்த தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதை தொடர்ந்து, பொதுசிவில் சட்டத்திற்கான இணையதளத்தை உத்தராகண்ட் முதலமைச்சர் இன்று பிற்பகல் […]
கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த ஆண்புலி கடித்து கொன்றது. இதையடுத்து, அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், மானந்தவாடி நகராட்சியின் சில பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, புலியை சுட்டுப் பிடிக்க மாநில வனத்துறை முடிவு செய்து தேடிவந்த நிலையில், நேற்று காலை தேடுதல் குழுவினரை புலி தாக்கிய […]
டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். வழக்கம்போல, இந்தமுறையும் குடியரசு விழா டெல்லி ராஜ்பாத் (கடமைப் பாதை) பகுதியில் தான் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய உடையான மகாத்மா காந்தி ஜாக்கெட் அணிந்து கொண்டு வருகை தந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், […]
இலங்கை: முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன், யோஷித ராஜபக்ச அரசாங்கத்திற்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்களுடன் தொடர்புடைய பொருளாதார மோசடி வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் சொத்துக் குவிப்பு புகாரில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் யோஷித மீது குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன்னதாக வழக்குப்பதிவு செய்திருந்தது. அதனை தொடர்ந்து அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையையும் நடத்தியது. ஜனவரி 3 அன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) சுமார் இரண்டு […]
தர்மசாலா : ஹிமாச்சல் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டு வந்தன. அப்போது தான் கஞ்சா செடி வளர்க்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது, தொழில்துறை பயன்பாடு, மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக கஞ்சா செடி வளர்த்து கொள்ளலாம் என்று மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் பொருட்டு, சவுத்ரி சர்வான் […]
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது என்றும் இதில் 5 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, பாந்தரா மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இன்று காலை 10.30 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்து ஏற்பட்டதில் மேற்கூரை பெயர்ந்துள்ளது. விபத்து நேர்ந்த சமயத்தில் 12 பேர் அங்கிருத்துள்ளனர். சம்பவம் […]
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளில் 12 பேர் வேறு ஒரு ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயமுற்றனர் இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்தானது ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜி மற்றும் பர்தானே நிலையங்களுக்கு இடையே பச்சோரா அருகே […]
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புஷ்பக் ரயிலில் தீப்பற்றியதாக பரவிய வதந்தியை நம்பி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, `அபாய அலாரம்’ அடித்ததால், மும்பையில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள பச்சோராவிற்கு அருகில் உள்ள மஹேஜி மற்றும் பர்தாட் நிலையங்களுக்கு இடையில் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், வேகமாக ரயில் பெட்டியில் இருந்து […]
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இன்று மாலை 5 மணியளவில் ரயிலில் தீ விபத்து என பரவிய தகவலால் புஷ்பக் ரயிலில் இருந்தவர்கள் அபாயச் சங்கிலியை இழுத்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது, எதிரே வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் […]
டெல்லி: நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு இன்று (ஜனவரி 22) முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் மிக உயரிய பதவிகளுக்கான இந்தத் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் https://upsconline .gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் அங்கு தன்னார்வலராக பணிபுரிந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். முதலில் கொல்கத்தா நகர போலீசார் விசாரணை செய்து வந்த இந்த வழக்கானது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சிபிஐ வசம் மாறியது. சிபிஐ வழக்கு விசாரணை தொடர்ந்து சஞ்சய் ராய் குற்றவாளி என […]
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்வு ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் நிகழ்வில் புனித நீராட நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிராயாக்ராஜிற்கு வருகை தருகின்றனர். இப்படியாக நாள் தோறும் பிரயாக்ராஜில் பக்தர்கள் கூடி வரும் நிலையில் இன்று திடீரென மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு […]
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, எதிர்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக வேட்புமனு இறுதி பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும். பிப்ரவரி 5இல் வாக்குப்பதிவும், பிப்ரவரி […]
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தான். ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என போராட்டங்களும் நடைபெற்றது. […]
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ஷிகபூல் என்ற மருத்துவமனைக்கு மெட்ரோ மூலம் கொண்டு சென்றனர். அவசர மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் மனித உறுப்புகள் பொதுவாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் விமானங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு மெட்ரோவை தேர்வு செய்தது […]
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 அன்று தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்ய உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் பொது தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் கடைசி […]
ஆந்திரா : பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்றபடி கடைசி வரை பொறுமையாக களத்திற்குள் நின்று சேவல் ஒன்று அதன் உரிமையாளருக்கு ரூ1.25 கோடியை பரிசாக பெற்றுக்கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவல் சண்டை என்றாலே ஒரு வட்டத்திற்குள் சில சேவல்கள் நின்று கொண்டு சண்டைபோடுவதும் அதில் கடைசி வரை எந்த சேவல் களத்தில் நிற்கிறதோ அது தான் வெற்றியாளரும் ஆகும் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும். அப்படி ஆந்திராவில் நடத்தப்பட்ட சேவல் சண்டைபோட்டியின்போது அந்த சேவல் […]