ஆந்திரப்பிரதேசம் :இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100வது ஏவலுக்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் நாளை மறுநாள் (29ம் தேதி) விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதாவது, என்விஎஸ்-02 என்ற செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ நேற்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின், 2வது ஏவுதளத்திலிருந்து, நாளை மறுநாள் காலை 6.30 மணியளவில் NVS-2 என்ற செயற்கைக்கோளுடன், GSLV-F15 ராக்கெட் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இது இஸ்ரோவின் 100வது ராக்கெட் என்பது பெருமைக்குரியது.
unknown nodeஇந்த அமைப்பு இந்தியாவிற்குள்ளும் மற்றும் இந்திய நிலப்பரப்பைத் தாண்டி 1,500 கிமீ வரை செல்கிறது. அதன்படி, இது இரண்டு வகையான சேவைகளை வழங்குகிறது, ஒன்று ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ் (SPS), இது 20 மீட்டருக்கும் குறைவான நிலை துல்லியத்தை வழங்குகிறது. மற்றொன்று, குறிப்பிட்ட வழிசெலுத்தல் திறன்களுக்காக வடிவமைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சேவை (RS) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
unknown node