கேரளா : மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த கிரீஷ்மா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை காதலித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த 2022-ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவிக்க காதலித்து வந்த ஷாரோன் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே, ஷாரோன் ராஜை தீர்த்து காட்டினாள் தான் நம் […]
டெல்லி: துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், செஸ் உலக சாம்பியன் குகேஷ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார். 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான இந்த கேல் ரத்னா விருது குகேஷ் (செஸ் வீரர்) ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி வீரர்), மனுபாக்கர் […]
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு செய்ய ஊதிய கமிஷன் ஒன்று மத்திய அரசால் அமைக்கப்படும். இந்த ஊதிய கமிஷனானது, நாட்டின் பணவீக்கம், வருவாய், விலைவாசி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஊதிய உயர்வு மற்ற விவரங்கள் குறித்து மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்ற சலுகைகள் குறித்த மாற்றங்களை அமல்படுத்தும். இறுதியாக […]
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் – வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிகாலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. போங்கிர் பைபாஸ் சாலை அருகே ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது என அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர். இந்த விபத்தில், உயிரிழந்தது ஒரு […]
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சினிமா பாணியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தகவலின்படி, பீதர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் போட ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது […]
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை அறிந்த 4-வது நாடு என்கிற பெருமையை பெறுகிறது இந்தியா. ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக கடந்த டிச.30ம் தேதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் படிப்படிப்பாயாக அதன் தூரங்கள் குறைக்கப்பட்டு, இடையில் பல்வேறு தொழில்நுட்ப இடர்பாடுகள் ஏற்பட்டாலும், இஸ்ரோ தனது […]
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள் பரிமாற்றம் செய்யும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் செயல்முறையின் முன்னோடியாக பார்க்கப்பட்டும் இந்த ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி எனும் 4000 கிலோ […]
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ ராணுவ தளபதியாக 1949ஆம் ஆண்டு ஜனவரி 15இல் பீல்ட் மார்ஷல் கே.எம். கரியப்பா நியமனம் செய்யப்பட்டார். அதனை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 15இல் ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் BEG & சென்டர் பரேட் மைதானத்தில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பில் […]
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா கும்பமேளா நிகழ்வு நேற்று தொடங்கியது. நேற்று (ஜனவரி 13) முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் இந்த கும்பமேளா நிகழ்வு நடைபெறும். இதனை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளிக்கும் நிகழ்வு மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாக […]
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம, நாளை மறுநாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல், ஜனவரி 16 காணும் பொங்கல் ஆகிய தினங்கள் மட்டுமின்றி ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அளித்து ஒருவார காலம் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தைப் போல, அண்டை மாநில எல்லையோர பகுதிகளிலும் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அங்கும் உள்ளூர் விடுமுறை விடுவது […]
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான ‘இசட்-மோர்’ (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த சுரங்கப்பாதை குளிர்காலங்களில் சோனாமார்க் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான அணுகலை உறுதிசெய்கிறது. பனிமூட்டம் காரணமாக சாலைகள் மூடப்படும் பிரச்சினையை தீர்க்கும் என்ற நம்பிக்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சோனாமார்க் சுரங்கப்பாதையின் பணிகள் மே 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பொருளாதார சவால்கள் காரணமாக 2018ஆம் ஆண்டு இந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் திட்டம் அந்த சமயம் நிறைவேற […]
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை தேவஸ்தான கவுண்டர் எண் 47ல் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. கவுன்டரில் இருந்த யுபிஎஸ் கணினியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். யுபிஎஸ் […]
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நாளை (ஜனவரி 14) மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். பொன்னம்பல மேட்டில் மகரஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவதாக கூறப்படுவது ஐதீகம். இத்னை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மகரஜோதி தரிசன சமயத்தில் சபரிமலை வருவதுண்டு. இதனால் மற்ற நாட்களை விட இந்த […]
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி அரசியல் பிரமுகரிடம் ரூ.50 கோடி வரை ஏமாற்ற முயற்சித்த வழக்கு இதுபோல பல்வேறு மோசடி வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுளளார் சுகேஷ் சந்திரா. இவர், அண்மையில் தனது வழக்கறிஞர் மூலமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு கடிதம் எழுதியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதில், தன்மீதான […]
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி PSLV C-60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் A, ஸ்பேடெக்ஸ் B ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இப்போது, ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 விண்கலன்களுக்கு இடையேயான இடைவெளியை குறைத்தும், அதிகரித்தும் இஸ்ரோ சோதித்து வருகிறது. […]
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை பதற வைத்து வருகிறது. அதில் 8 வயது பள்ளி சிறுமி ஒருவர் தனது வகுப்பறைக்கு செல்லும் போது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து அதன் பிறகு உயிரிழந்துள்ளார். அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சபர் (Zebar) பள்ளியில் 3வது வகுப்பு பயின்று வருகிறார் 8 வயது சிறுமி கார்கி ரன்பரா. இச்சிறுமி நேற்று வழக்கம் போல […]
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. 400 கிலோ எடை கொண்ட 2 செயற்கைகோள்களை விண்ணில் 700 கிமீ தொலைவில் நிலை நிறுத்தும் முயற்சி வெற்றிகரமாக முடிந்தது. இரண்டு செயற்கைகோளும் 20 […]
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் தரிசனத்தில் கலந்து கொள்ள திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பக்தர்கள் பலியாகியிருக்கிற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருப்பதி வைகுண்ட வாசலில் தரிசன டோக்கன் பெறுவதற்காக […]
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம் வரிப்பகிர்வு தொகையை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம், ரூ.1,73,030 கோடி ரூபாயனது 2025 ஜனவரி மாதத்திற்கு மாநில வாரியாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2024இல் இந்த வரிப்பகிர்வு ரூ.89,086 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த முறை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிட இந்த முறை அதிக தொகை ஒதுக்கீடு […]
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என ஊழியர்களுக்கு அறிவுறுத்திய L & T தலைவரை, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விமர்சித்துள்ளார். அதாவது, L&T (லார்சன் அண்ட் டூப்ரோ) நிறுவனதலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் “ஒரு வாரத்துக்கு 90 மணிநேரம் நீங்கள் வேலை […]