திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டோக்கன் நேற்று அதிகாலை திருப்பதியில் 7 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் கொடுக்கப்பட இருந்தது. இதனை வாங்க நேற்று முன்தினம் இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது. திருப்பதி எம்ஜிஎம் பள்ளிக்கு அருகே உள்ள கவுண்டரில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் முண்டியடித்துக்கொண்டு வரையில் முன்செல்ல முற்பட்டனர். அப்போது […]
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டோக்கன் இன்று அதிகாலை திருப்பதியில் 7 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் கொடுக்கப்பட இருந்தது. இதனை வாங்க நேற்று கவுண்டர்களில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்தது. திருப்பதி எம்ஜிஎம் பள்ளிக்கு அருகே உள்ள கவுண்டரில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் முண்டியடித்துக்கொண்டு வரையில் முன்செல்ல முற்பட்டனர். […]
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முங்கேலி மாவட்டத்தின் சரகான் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் கட்டப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தில் சிம்னியை நிறுவும் பணிகள் நடைபெற்றன. அப்போது எதிர்பாராத விதமாக சிம்னி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் அடியில் […]
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்லீப்பிங் பாட்’ (Sleeping Pod) தொடங்கப்பட்டுள்ளது. படுக்கை, குளிர்சாதனம், சார்ஜிங், Wi-Fi என சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்லீப்பிங் பாட்-க்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம், ரயிலுக்காகக் காத்திருக்கும் போது நீங்கள் நீண்ட நேரம் ஸ்டேஷனில் இருக்க நேர்ந்தாலோ, உங்களுடன் பயணிப்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டாலோ, ஹைதராபாத்தில் புதியதாக […]
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில் பக்தர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மல்லிகா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 2 லட்சம் நிவாரணமும், 6 பேர் குடும்பத்தினருக்கும் ஆந்திர அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதனையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த 2015 முதல் தொடர்ந்து 2 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வென்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி அரசியல் மாற்றங்கள்… கடந்த சில மாதங்களாக டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை வழக்கில் கைது, பிறகு ஜாமீன் , முதலமைச்சர் பதவி ராஜினாமா […]
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, எம்.கே-3 மற்றும் கிரயோஜெனிக் என்ஜின் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்திய விண்வெளித் துறையின் தொடர்புடைய பிரிவுகளில் […]
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மல்லிகா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 2 லட்சம் நிவாரணமும், 6 பேர் குடும்பத்தினருக்கும் ஆந்திர அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தமிழக […]
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். தற்பொழுது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட […]
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டவுடன் நேற்று இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்பொழுது, இரவு 8 மணிக்கு உடல்நிலை சரியில்லாத பக்தரை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்துள்ளனர். இதைக்கண்ட பக்தர்கள் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றதால், 2 இடங்களில் நெரிசல் ஏற்பட்டு 1 தமிழர் உள்பட 6 பேர் பலியாகினர். திருப்பதியில் கூட்ட […]
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் “கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்று பரபரப்பட்டு வரும் தகவல்களுக்கு அதிரடியான முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில், கோவாவின் வருமானம் கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமாக வந்துள்ளதாக அதற்கான புள்ளி விவரம் வெளி வந்துள்ளது. கோவா சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, ஹோட்டல்கள் முழுவதும் புக்கிங் ஆன நிலையில், புதிதாக புக்கிங் செய்ய […]
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டவுடன் நேற்று இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் அளவுக்கு அதிகமாக அந்த பகுதியில் இரவிலே திரண்டதால் அங்கு தள்ளுமுள்ளு […]
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான டோக்கன் இலவசமாக இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, நேற்று இரவு முழுவதுமே பல பக்தர்கள் கூடிய நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வழங்கப்பட்ட தகவலை அறிந்த மக்கள் அளவுக்கு அதிகமாக அந்த பகுதியில் இரவிலே திரண்டதால் அங்கு […]
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் 2 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. ஸ்பேடெக்ஸ் ஏ (SpaDex A) மற்றும் ஸ்பேடெக்ஸ் பி (SpaDex B) ஆகிய 400 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் சுமந்து சென்றது. விண்ணில் 700 கிமீ தொலைவில் இரண்டு […]
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD) சேர்மன் BR நாயுடு கூறியுள்ளார். சீனாவில் அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் 7 பேருக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஜன.19ஆம் தேதி வரை சிறப்பு டோக்கன் […]
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற திட்டம், தேர்தலுக்கான உழைப்பு மற்றும் செலவினங்களை குறைக்க உதவும் என ஆதரவாளர்கள் ஒரு பக்கம் தெரிவிக்கின்றார்கள். மற்றோரு பக்கம் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த திட்டம் செயல்படுத்தபட்டால் இடைத்தேர்தல்களின் அவசியம் குறைவடையும், இதனை செயல்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார்கள். இந்த திட்டத்திற்கான மசோதா […]
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வரும் ஜனவரி 14, -ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோ தலைவராகப் பணியாற்றுவார். இஸ்ரோவின் தற்போதைய தலைவர் திரு சோம்நாத் அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு அடுத்ததாக ஒரு தலைவர் நியமிக்கப்படவேண்டும் என்பதால் தற்போது, வி. நாராயணன் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரின் […]
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப முன்னேற்றம், பொதுவான தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இன்று சத்யா நாதெல்லா இந்தியாவில் AI தொழில்நுட்பம் சார்ந்து சுமார் 30 பில்லியன் அமெரிக்கா டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 25,718 கோடி) முதலீடு செய்ய […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். டெல்லி மாநில 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி […]
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை பிரதான கட்சியினர் ஆரம்பித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லி முதலமைச்சர் அதிஷி போட்டியிடும் கல்காஜி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி என்பவர் போட்டியிட உள்ளார். இதற்காக அவர் காரசார பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக அதிஷி குடும்ப […]