பரபரப்பு : உச்சநீதிமன்றத்துக்கு வெளியே தீக்குளித்த நபர்...! நடந்தது என்ன..?

தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே நிலையில், காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில்

தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே நிலையில், காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நொய்டாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே தரையில் உருண்டு அழுதுள்ளார். அப்போது அவர் ‘நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பம் வறுமையில் வாடுகிறது என்று கூறிவிட்டு தீக்குளித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், அந்த நபர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர் கொள்வதால் உச்சநீதிமன்றத்திற்கு வந்ததாகவும், அவரிடம் விரிவாக எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளனர், மேலும் அவர்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.