முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருமே குற்றவாளிகள் என தீர்ப்பு.
புதுச்சேரியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி (மத்திய அமைச்சராக இருந்தபோது) வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த விசாரணையில் தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு 2014-ஆம் ஆடுனு முதல் தற்போது வரை விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருமே குற்றவாளிகள் என இன்று புதுச்சேரி உள்ள என்ஐஏ சிறப்பு மற்றும் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுத்த வழக்கில் தமிழர் விடுதலை படையை சேர்ந்த 6 பேரும் குற்றவாளி என்று புதுச்சேரி நீதிமன்றம் நீதிபத்தில் செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார். அதன்படி, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. தமிழக சிறைகளிலுள்ள திருச்செல்வம், தமிழரசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான் மார்ட்டின் மற்றும் கார்த்திக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…