டெல்லியில் இன்று பிரதமர் மோடியை கொல்ல பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி.. உளவுத்துறை பரபரப்பு எச்சரிக்கை…

Published by
kavitha
  • பிரதமரின் பேரணியில் பாக்கிஸ்தான் தீவிரவாத தாக்குதல் சதி.
  • உளவுத்துறையின் பதறவைக்கும் எச்சரிக்கை.

தலைநகர் டெல்லியில் இன்று இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் திடீர் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற  தீவிரவாத அமைப்பு சதி செய்துள்ளதாக தற்போது தகவல் தெரியவந்துள்ளது. மத்திய அரசு விரைவில் முறைப்படுத்தப்படாத குடியிருப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக புதிய முடிவெடுக்கவுள்ளது. இதுதொடர்பான விளக்கப் பேரணியானது டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி தலைமையில்,  மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்தப் பேரணியில் திடீர்  தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த  ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த சதி செய்திருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனவே, இதுதொடர்பாக டெல்லி காவல்த்துறை மற்றும் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவான எஸ்பிஜிக்கும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத் தொடர்ந்து பிரதமருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் மேலும் சில அதிரடி மாற்றங்கள்  செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் முக்கிய சாலைகளில் கூடுதல் கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்களின் நடமாட்டம், வாகனங்களின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.மேலும்,அதிக  தொலைவில் இருந்தும் துப்பாக்கியில் சரியாக குறிபார்த்து சுடும் வீரர்கள், உயரமான கட்டிடங்களில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவல் தற்போது இந்திய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
kavitha

Recent Posts

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

20 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

3 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

4 hours ago