முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை ! முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு  நாடு முழுவதும் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை  முதலில் பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னரும் தீவிரம் குறையாத நிலையில் 2-ஆம் கட்டமாக ஊரடங்கு மே 3-ஆம்  தேதி நீட்டிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு மூன்றாம்கட்டமாக நீட்டிக்கப்பட்டது.

இதற்குஇடையில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்கள்,மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது ஊரடங்கு மே 17-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இந்நிலையில் தான் இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பதா ? வேண்டாமா ? என்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.