போலீஸ் மிருகத்தனமாக நடந்து கொள்வது ஒரு கொடூரமான குற்றம்.! ராகுல் காந்தி கடும் கண்டனம்.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து  உயிரிழந்தனர். இந்த

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து  உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்  சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் உயிரிழந்த விவகாரத்தில் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், பாதுகாவலர்கள் ஒடுக்குபவர்களாக மாறுவது மிகவும் மோசமான ஒன்று எனவும்  போலீஸ் மிருகத்தனமாக நடந்து கொள்வது ஒரு கொடூரமான குற்றம் என விமர்சனம் செய்துள்ளார்.

unknown node

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.