"இந்திய விமானப்படை என்றால் விடாமுயற்சி” – பிரதமர் மோடி வாழ்த்து...!

Prime Minister Modi today congratulated the 89th of the Indian Air Force Day

இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழாவான இன்று பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

இந்திய விமானப்படையின் ஆண்டு விழா,ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,இன்று இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,இந்திய விமானப்படை என்றால் விடாமுயற்சி என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“விமானப்படை தினத்தில் நமது விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். இந்திய விமானப்படை என்றால் தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு ஒத்ததாகும். அவர்கள் நாட்டைப் பாதுகாப்பதிலும், சவால்களின் போது தங்கள் மனிதாபிமான உணர்வின் மூலமும் தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளனர்”,என்று பதிவிட்டுள்ளார்.

unknown node

அதேபோல,நாட்டின் குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“அனைத்து இந்திய விமானப்படை பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விமானப்படையின் 89 வது ஆண்டு நிறைவுக்கு அன்பான வாழ்த்துக்கள். பலவிதமான சவால்களுக்கு மத்தியில் நாட்டை அமைதியுடனும் நெகிழ்ச்சியுடனும் வைத்ததற்காகவும், தேசத்திற்கான சேவையில் உறுதியாக இருப்பதற்காகவும் நமது விமானப்படை வீரர்களை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம்”,என்று பதிவிட்டுள்ளார்.

unknown node