நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

PM Modi in Parliment

நாடாளுமன்ற மக்களவையில் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இருபக்கமும் காரசாரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்ற உள்ள நிலையில், பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை தந்துள்ளார். மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், மக்களவையில் அலுவல்களில் கலந்து கொள்ள வருகை தந்துளார் பிரதமர் மோடி. அதன்படி, மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் குழு தலைவர் அதிரஞ்சன் சௌத்ரி ஷேக்ஸ்பியர் பேசி வரும் நிலையில், அவையில் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருக்கிறார்.

“பாரத் மாதா கி ஜெய்” என முழக்கமிட்டு, மேஜைகளை தட்டியும் பாஜக எம்பிக்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்