நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

Prime Minister Narendra Modi lays the foundation stone for the permanent campus of IIM-Sambalpur, Odisha, via video conferencing

சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிரந்தர வளாகத்திற்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஒடிசா ஆளுநர் மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் , மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஐஐஎம் சம்பல்பூரின் ஆசிரியர்கள் உட்பட 5000-க்கும் அதிகமானோர் காணொலி மூலம் இதில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டிய பின்பு பிரதமர் மோடி பேசுகையில் ,விவசாயத் துறை முதல் விண்வெளித் துறை வரை, தொடக்கங்களுக்கான நோக்கம் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் முன்னால் இருக்கும் பெரிய வாய்ப்புகளுக்கு இந்திய இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்..