துப்புரவு தொழிளாலார்கள் மீது மலர் தூவி பாராட்டு தெரிவித்த பஞ்சாப் மக்கள்!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21வரும்  நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நலனை பேணி காக்க துப்புரவு தொழிலாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து, துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் நாபா என்னும் நகரில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மீது, மக்கள் பூ மழை பொழிந்து பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த வீடியோவை பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “துப்புரவுத் தொழிலாளி மீது நாபா மக்கள் காட்டிய கைதட்டலையும் பாசத்தையும் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node