இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல ராகுல் காந்தி முடிவு..?

உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது ஒரு தலித் இளம்பெண் 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது ஒரு தலித் இளம்பெண் 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.  பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்கள் முன் பாதிக்கப்பட்ட உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போதுஉத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் இன்று  ஹத்ராஸ் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ராகுல் காந்தி உடன்  பிரியங்கா காந்தியும் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.