Rahul Gandhi: இந்திய இளைஞர்களின் மிக அழுத்தமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் என்று தான் நம்பும் கட்சியின் ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி அறிவித்துள்ளார். ராஜஸ்தானில் பாரத் ஜோடா யாத்திரையின் போது இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.
அதன்படி, 25 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பட்டதாரி மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு முதல் வேலை உத்தரவாதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு ஓராண்டு பயிற்சி காலத்தில் ₹ 1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்.
Read More –ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.!
சிறு தொழில்களைத் தொடங்கத் தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5000 கோடியில் ஸ்டார்ட்அப் ஃபண்ட் உருவாக்கப்படும், கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, நாடு முழுவதும் சட்டம் இயற்றப்படும். தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தைத் தடுக்க காகிதக் கசிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டம் கொண்டு வரும். அரசு போட்டித் தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும், அவுட்சோர்சிங் எதுவும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node