ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.இது தொடர்பாக நகாவுர்,பாலாஜி காவல் நிலையம் போலீசார் கூறுகையில்,இந்த விபத்தில் எட்டு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேர் பலத்த காயமடைந்து பிகானீரின் நோகாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்து,மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நகாவூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்தார்.மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும், என்றார்.
unknown nodeஇதனையடுத்து,ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது செய்திக்குறிப்பில் கூறியதாவது:
“ராஜஸ்தானின் நாகூரில் நடந்த கொடூரமான சாலை விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிர் இழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
unknown nodeஇந்நிலையில்,விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கூறியதாவது:
“ராஜஸ்தானின் நாகூரில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதி(பிஎம்என்ஆர்எஃப்)யிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும்,காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்”,என்று தெரிவித்துள்ளது.
unknown node