ராஜஸ்தான் மாணவர் முதலிடம் ! தமிழகத்தை சேர்ந்த மாணவி 57வது இடம்

நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.கடந்த மே மாதம் நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
இன்று நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியானது.தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in , http://www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 48.57 தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதிகப்பட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
ராஜஸ்தானை சேர்ந்த நலின் கந்தேல்வால் என்ற மாணவன் 720 மதிப்பெண்ணுக்கு 701 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.ஸ்ருதி என்ற மாணவி 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார் .நீட் தேர்வில் இந்திய அளவில் 57வது இடம் ஸ்ருதி பிடித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025