ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 4% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதன்படி,கடந்த மே மாதத்திலிருந்து 8 வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 4% ஆகவே தொடர்கிறது.
அதேபோல,ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் இன்றி 3.35% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது:”இந்தியப் பொருளாதாரம் மீட்கப்பட்டு வருகிறது. இது கடந்த MPC கூட்டத்தை விட சிறந்த நிலையில் உள்ளது. வளர்ச்சி தூண்டுதல்கள் வலுப்படுத்தும், பணவீக்கப் பாதை எதிர்பார்த்ததை விட சாதகமானது; நமது பொருளாதாரத்தின் பொருளாதார அடிப்படைகளின் நெகிழ்ச்சி காரணமாக, இயல்பான நேரத்தை நோக்கி பயணிக்கும் என்று நம்புகிறேன்.
உண்மையான ஜிடிபி வளர்ச்சிக்கான திட்டம் 2021-22 நிதியாண்டில் 9.5% இல் தக்கவைக்கப்படுகிறது. இது 2021-22 ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டில் (Q2 இல்) 7.9%,மூன்றாம் காலாண்டில் (Q3 இல்) 6.8% மற்றும் Q4 இல் 6.1% கொண்டுள்ளது.இதனால்,2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான Q1 க்கான உண்மையான ஜிடிபி (GDP) வளர்ச்சி 17.2% ஆக இருக்கும்.மேலும்,2022 நிதியாண்டில் சிபிஐ பணவீக்கம் 5.3% ஆக இருக்கும். 2022-23 நிதியாண்டின் Q1 க்கான சிபிஐ பணவீக்கம் 5.2% ஆக இருக்கும்.
மேலும்,குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 4% ஆக தொடரும்.ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் இன்றி 3.35% ஆக தொடரும்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…