மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்...! 9 பேர் உயிரிழப்பு...!

10 people have lost their lives as riots have broken out again in Manipur's Kamenlok village.

Hero Image

மணிப்பூரின் காமென்லோக் கிராமத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பலர் உயிரிழந்த நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மணிப்பூரின் காமென்லோக் கிராமத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு நடைபெற்ற தாக்குதலில் 9 பேர்உயிரிழந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்னதாக, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் மத்திய அரசு ரூ.101.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.