“ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதே பிரதமர் மோடி பிறந்தநாளைக் கொண்டாட சிறந்த வழி!”- ஜே.பி.நட்டா

பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி, ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதே என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், டெல்லியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு “சேவா சப்தா” நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி, ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதே என தெரிவித்தார். மேலும், அரசியல் மற்றும் தேர்தல்களை எதிர்த்துப் போராடுவது தான் அரசியல் கட்சிகளின் வேலை என கூறிய அவர், இன்று நாம் செய்வது அரசியல் மட்டுமல்லாமல், மக்களுக்கான சேவைகளையும் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச மின்சாரம் வழங்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளாகவும் அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025