வாழ்த்துக்கள் ப்பா.. உனக்கும் மவனே..!ஒரே மேடையில் தந்தைக்கும்-மகனுக்கும் திருமணம்

ஒரே மேடையில் தந்தைக்கும்-மகனுக்கும் திருமணம் நடந்த நிகழ்வு  நடைபெற்றுள்ளது. மகனுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.குழ்ந்தையோடு வந்து திருமணம் செய்துகொண்டார் என்பது

ஒரே மேடையில் தந்தைக்கும்-மகனுக்கும் திருமணம் நடந்த நிகழ்வு  நடைபெற்றுள்ளது. மகனுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.குழ்ந்தையோடு வந்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் ஆனது ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில்  நடந்துள்ளது.இங்கு பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலான மக்கள் திருமணம் ஆகமாலே ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அதே கிராமத்தை சேர்ந்தராம்லால்மற்றும்ஷாக்கோரிஎன்ற தம்பதியினர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக திருமணம் செய்யாமலே டும்பம் நடத்தி வருந்துள்ளனர்.இந்த தம்பதிகளுக்குஜித்தீஷ்என்ற மகன் இருக்கிறார்.

இவர்களுடைய மகன் ஜித்தீசும் தன் தாய்-தந்தை போல் திருமணம் செய்யாமலேஅருணாஎன்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்து உள்ளார். இதனிடையே இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

unknown node

இவ்வாறு இக்கிராமத்தில் பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் தங்களது இல்லற வாழ்வை நடத்தி வருவதை கண்ட ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறது.அதன்படி தந்தை மற்றும் மகன் இருவருக்குமே ஒரே மேடையில் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.இதில் தம்பதிகள் 4 வரும் திருமண ஆடையில் அழகுற காட்சி அளித்தவாறு தங்கள் வீட்டு செல்லத்தை கொஞ்சியவாறு நிற்கின்றனர்.பழங்குடியின மக்கள் மத்தியில் இத்திருமணம் ஆனது வரவேற்ப்பை பெற்றுள்ளது.