#Breaking: டெல்லி காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தா நியமனம்.!

டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தா நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் டெல்லி காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தாவை நியமனம் செய்து

டெல்லி காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தாவை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தா நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் டெல்லி காவல் ஆணையராக ஸ்ரீவஸ்தாவை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர செய்தனர். இந்த கலசவரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் கலவரம் ஏற்பட்டபோது, உளவுத்துறை தகவலை பெற்று காவல்துறை முன்கூட்டியே செயல்படவில்லை என்ற புகார் எழுந்தது. பலர் உதவிகேட்டு போராடிய நிலையில் உரிய நேரத்தில் காவல்துறை உதவி அவர்களுக்கு கிடைக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த நிலையில் டெல்லியின் புதிய காவல் ஆணையராக ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.