ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கூட்டாக கடிதம்.
2018ல் பீமா – கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக சமூக போராளி ஸ்டேன் சுவாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கை என்ஐஏ அமைப்பு விசாரித்து வந்த நிலையில், பெயில் மறுக்கப்பட்டு வந்தது. இதனிடையே, ஸ்டேன் சுவாமி உடல்நிலை மோசமானதை அடுத்து இவர் கடந்த சில வாரமாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் சுவாமி இன்று காலமானார்.
இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஸ்டேன் சுவாமி சிறைக் காவலில் காலமானதை அடுத்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சமூக போராளி ஸ்டேன் சாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ஸ்டேன் சுவாமி மீது பொய்யான வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும், மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட 10 தலைவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…