ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தகவல்.
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதனிடையே, நாடெங்கிலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பல குடும்பங்கள் பணத்தையும், உயிரையும் இழந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…