வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்துங்கள்.!

Agrarian organizations have demanded that the central government stop negotiating with other organizations.

வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு, விவசாய அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், பலன் ஏதும் கிட்டவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், வேறு அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என விவசாய அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் வேறு அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.