NTA அலுவலகத்தில் நுழைந்த மாணவர்கள்! தடியடி நடத்தி கலைத்த போலீசார் ..!

தேசிய தேர்வு முகமை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை ஒரு புறம் சிபிஐ நடத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக

NTA Office ,

தேசிய தேர்வு முகமை:நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை ஒரு புறம் சிபிஐ நடத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலையில் முதல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மாணவர்கள் தற்போது தேசிய தேர்வு முகமையின் (NTA) அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

இதனால், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த டெல்லி காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். இது மேலும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.