Subramanian Swamy - PM Modi [File Image]
PM Modi : பிரதமர் மோடி அவரது வாரணாசி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டால் என்னவாகும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
பாஜகவில் இருந்தாலும் பாஜக தலைவர்களுக்கு எதிராக தனது விமர்சனங்களை முன்வைக்க தவறியதில்லை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. பல்வேறு சமயங்களில் இவரது சர்ச்சையான கருத்துக்கள் தேசிய அளவில் பேசுபொருளாக மாறிவிடுகிறது. அதனாலோ என்னவோ, தேர்தல் நேரங்களில் இவரை பிரச்சாரம் செய்ய பாஜக தலைமை அழைப்பதில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, அவரது தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது போல கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. அண்மையில், சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாராணாசிக்கு ஆன்மீக பயணமாக வந்து இருந்தார்.
வாரணாசி பயணத்தை அடுத்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் ஓர் பதிவை இட்டு இருந்தார். அதில், வாரணாசி வாக்காளர்கள் மோடியை தோற்கடித்தால், ஞானவாபி மசூதியினர், காசி விஸ்வநாதர் ஆலைய இடத்தை காலி செய்து, முஸ்லிம் தலைவர்கள் விருப்பப்படி தங்கள் மசூதியை வேறு இடத்தில் கட்டுவது எளிதாகிவிடும். இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் படி வேறு இடத்தில் மசூதி கட்டலாம். மேலும், ராமர் கோவில் நில வழக்கில் நீதிமன்றத்தின் மூலம் மற்றொரு இடத்தில் மசூதி கட்ட முஸ்லிம் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த மாதம் மதுரைக்கு, பாஜக பிரமுகரின் திருமண விழாவுக்கு வந்த சுப்பிரமணியன் சுவாமி, 2024 தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். ஆனால் பிரதமர் மோடி அவர் சொந்த தொகுதியில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறி அதிர வைத்தார் சுப்பிரமணியன் சுவாமி.
யார் வேண்டுமானாலும் , வேட்பாளர்களை நிறுத்தலாம். ஆனால் கட்சி வலுவாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை வைத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும். சீனா, இந்தியாவின் 4000 கிமீ பகுதியை ஆக்கிரமித்து உள்ளது. அதனை பிரதமர் மோடி தடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக நமது நாடு பின்தங்கி உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாலத்தீவுடன் பிரச்சினை உள்ளது அதற்கு மோடி ஒன்றும் செய்யவில்லை. இதன் காரணமாகவே மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என பேசி தேர்தலுக்கு முன்பே அரசியல் களத்தை அதிர வைத்தவர் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி.
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…