குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி – மத்திய அரசின் மனுவை விசாரிக்க மறுப்பு

Supreme Court of India refuses to intervene on Centre’s plea seeking order against proposed tractors rally by farmers on Jan 26.

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு பல முறை பேச்சுவார்த்தை நடத்தியது.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது.இதற்கு முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உச்சநீதி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் 4 பேர் இடம்பிடித்தனர்.ஆனால் விவசாயிகள் குழுவில் அமைக்கப்பட்டவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்றும் இந்த குழுவை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.மேலும் விவசாயிகள்,ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்களில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லிக்கு நுழையும் விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்தக்கோரி மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட இடைக்கால மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.மேலும்  முடிவெடுக்க வேண்டிய இடத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்த்துறை இருக்கிறது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.