கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணா.இவரின் மருமகன் வி .ஜி சித்தார்த்தா காபி டே நிறுவனத்தை இயக்கி வந்தார். காபி டே நிறுவனத்தின் கிளைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் உள்ளது.
unknown nodeகாபி டே நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக வி .ஜி சித்தார்த்தா மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து சித்தார்த்தா உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
unknown nodeநீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று நேத்ராவதி ஆற்றில் இருந்து சித்தார்த்தா உடல் மீட்கப்பட்டது.இந்நிலையில் சித்தார்த்தா மரணத்தை அடுத்து காபி டே நிறுவனத்திற்கு இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.