திறப்பு விழாவில் கத்தரிக்கோல் வழங்க தாமானதால் கடுப்பான தெலுங்கானா முதல்வர்.
தெலுங்கானாவில் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள மண்டேபள்ளி கிராமத்தில் வீடு இல்லா ஏழை மக்களுக்கு வீடு வழங்கு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நிலையில், இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது ரிப்பன் வெட்டும் நிகழ்வின் போது, விழா ஏற்பாட்டாளர்கள், ரிப்பனை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை வைக்க மறந்து விட்டனர். அதன் பின் கத்தரிக்கோல் கொண்டு வர தாமதமானதால், டென்ஷன் ஆன சந்திரசேகர ராவ் அவர்கள், தனது கையாலே ரிப்பனை ஒட்டி வைத்திருந்த டேப்பை எடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node