மும்பையில் பயங்கர தீ விபத்து..7 பேர் பலி, 48 பேர் காயம்.! அரசு நிதியுதவி அறிவிப்பு.!

Goregaon fire

மும்பையின் கோரேகானில் உள்ள கட்டிடத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆசாத் மைதானம் அருகே உள்ள எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த முயற்சி எடுத்ததோடு, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் சிக்கியவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் காயமடைந்த 46 பேரில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசாரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். நடந்தது துரதிஷ்டவசமானது. இறந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும். காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்படும்.” என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், “மும்பையில் உள்ள கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். நாங்கள் மும்பை போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்